தமிழகத்தில் புதிய மாநில கல்விக் கொள்கையை அமைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை முதல்வர் அமைத்துள்ளார்.
வருங்காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்யவும், புதுமைகளைப் பூத்திடச் செய்யவும் புதிய புதிய சிந்தனைகளை வளர்க்க வேண்டியது அரசின் கடமை.
தமிழகத்திற்கு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
குழு தலைவர் டெல்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் த.முருகேசன்.
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக பயிற்சி வகுப்புகளை நடத்த 4 பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி. உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/