கடலூர் சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்ற கோயில் ஆகும். நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கனகசபை ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம்,

ஆனால், கடந்த சில நாட்களாக கோயில் தீட்சிதர்கள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏற்றி சாமி தரிசனம் செய்ய முடியாத வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கனகசபையில் ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதி வழக்க வேண்டும் என்று பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அரசு ஆய்வு செய்தது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், “கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் அருள்மிகு சபாநாயகர் (நடராஜர்) திருக்கோயிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/